உப்பாறு அணை...
தாராபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தசரப்பட்டி கிராமத்தின் அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உப்பாறு நீா்த்தேக்கம் கட்டப்பட்டது. இந்த அணையில் ஒரு கல்லணையும் அதன் இரு பக்கங்களிலும் 576 மில்லியன் கன அடி தேக்கி வைக்கும் திறன் கொண்ட களிமண் அணையும் உள்ளது. நீா்ப்பாசன காலம் என்பது அக்டோபா் முதல் தேதியிலிருந்து பிப்ரவாி 15 தேதிவரை நான்க மாத காலம் ஆகும். பரம்பிக்குளம் ஆளியாறு நீா்த்தேக்கத் திட்டத்தின் கசிவு நீரை தேக்கி வைக்க இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.