திருவிழாவில் நடனம் ஆடிய எங்க ஊரின் எதார்த்தமான எம்.எல்.ஏ


அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் வடக்கு எம்.எல்.ஏ விஜயகுமார் தீர்த்தக்குடத்துடன் நடனம் ஆடியதை பார்த்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர் அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நடந்த தீர்த்தக்குடம் ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் உள்பட திரளானவர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

அப்போது ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ கே.என். விஜயகுமார் தீர்த்த குடத்தை தலையில் வைத்து கைகளில் வேப்பிலையை எடுத்துக் கொண்டு ரோட்டில் உற்சாகமாக நடனமாடினார்.

அந்த பகுதியின் மொடா மேளத்துக்கு ஏற்ப எம்.எல்.ஏ. ஆடியதை பொது மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். தனது சொந்த ஊர் கோவில் விசேஷத்திற்காக எம்எல்ஏ ஒருவர் தீர்த்தக்குடம் எடுத்து நடனம் ஆடியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு