தேவையானவை:
கொள்ளு – அரை கப்புக்கும் கொஞ்சம் குறைவாக,
தனியா, சீரகம் – தலா 3 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
மிளகு – அரை டீஸ்பூன்,
நறுக்கிய சாம்பார் வெங்காயம் – கால் கப்,
புளிக்கரைசல் – கால் கப்,
நெய், கறிவேப்பிலை, கடுகு, சீரகம் – தாளிக்க தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளைக் கழுவி, 4 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் (குக்கரில் 6 (அ) 7 விசில் விடலாம்).
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, சாம்பார் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும் ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வேக வைத்த கொள்ளு கால் கப் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
இதனுடன் வேக வைத்த கொள்ளு ஒரு டேபிள்டீஸ்பூன் சேர்க்கவும்.
பிறகு புளிக்கரைசல் விட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கி, கொத்தமல்லி சேர்க்கவும்.
நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
சாதத்திலும் சாப்பிடலாம். அப்படியே சூப் மாதிரி குடிக்கவும் கொடுக்கலாம்.