திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய தலைவர்கள் விபரம் 

திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. மொத்தம் உள்ள 170 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்களில் 57 இடங்களை அ.தி.மு.க.வும், 75 இடங்களை தி.மு.க.வும், காங்கிரஸ் 9 இடத்தையும், தே.மு.தி.க. 4 இடத்தையும், பாரதிய ஜனதா 3 இடத்தையும், சுயேச்சைகள் 18 இடத்தையும், ம.தி.மு.க. ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு 2 இடத்தையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு இடத்தையும் பிடித்தது.


இன்று ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தாராபுரம் ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த செந்தில் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அவினாசி ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுதர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


காங்கயம் ஒன்றிய குழு தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட தினேஷ் குமார் வெற்றி பெற்றார்.

மடத்துக்குளம் ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த காவ்யா வெற்றி பெற்றார்.


மூலனூர் ஒன்றிய தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமதி வெற்றி பெற்றார்.


குண்டடம் ஒன்றிய குழு தலைவராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற குப்புசாமி வென்றார். இவர் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக உள்ளார். அ.தி.மு.க.கூட்டணியில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

திருப்பூர் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சொர்ணம்பாள் வெற்றி பெற்றார்.


பல்லடம் ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தேன்மொழி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


குடிமங்கலம் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சுகந்தி முரளி தேர்வு செய்யப்பட்டார்.

பொங்கலூர் ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ஊத்துக்குளி ஒன்றியத்தில் தி.மு.க.வை சேர்ந்த பிரேமா வெற்றி பெற்றார்.


உடுமலை ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7இடங்களில் தி.மு.க.வும், 4 இடங்களில் அ.தி.மு.க.வும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.


 





Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image