மனைவி மீதும் தன மீதும் மண்ணெண்னைய் ஊற்றி தவைத்துக்கொண்ட கூலி தொழிலாளி

அரியலுாரை சேர்ந்தவர் பால்ராஜ், 40. இவரது மனைவி மஞ்சுளா, 36; இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, திருப்பூர் பல்லடம் ரோடு, பாரதி நகரில் தங்கி, கட்டட வேலைக்கு, தம்பதி சென்று வருகின்றனர்.நேற்றுமுன்தினம், தம்பதி தீயில் கருகியவாறு, அலறிக்கொண்டிருந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீரபாண்டி போலீசார் நடத்திய விசாரணையில், 'மஞ்சுளா கால் வலி காரணமாக வேலைக்கு செல்லவில்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பால்ராஜ், வேலைக்கு செல்லாதது குறித்து, மஞ்சுளாவிடம் கேட்டார். தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், மஞ்சுளாவை, பால்ராஜ் அடித்துள்ளார். பிரச்னை பெரிதாகவே, பால்ராஜ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு, பின் மனைவி மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார்' என்று தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


 


 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image