மலைக்கோவில், ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த் திருவிழா

மலைக்கோவில், ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த் திருவிழாவில், இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.மங்கலம் அடுத்த, மலைக்கோவில் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை மற்றும் மாலை, சுவாமி கிரிவலம் நிகழ்ச்சியும், 6ம் தேதி, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. தொடர்ந்து, இரவில், யானை வாகனத்தில் சென்று அருள்பாலித்தனர்.இன்று காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவிநாயகர் தனித்தேரிலும், ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில், வள்ளி தெய்வானையுடன், ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை, 3:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் மற்றும் கிரிவலமாக செல்லும் தேரோட்டம் நடைபெற்றது. நாளை, பரிவேட்டை, குதிரை வாகன பவனியும், 10ம் தேதி மகா தரிசனமும், 11ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது.


 



 



 



Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020