வாக்குச் சாவடிக்கு போகாமல் ஓட்டு போட இ-ஓட்டு வசதி: சென்னை ஐஐடி.யில் ஆராய்ச்சி

வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே  இ-ஓட்டு போடும் புதிய தொழில்நுட்பம் குறித்து சென்னை ஐஐடி-யுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.. 


தொலை தூர இடங்களில் இருந்தும் ஓட்டளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி.யுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆராய்ச்சி திட்டங்கள் சென்னை ஐஐடி-யில் நடந்து  கொண்டிருக்கிறது. 


இது குறித்து தேர்தல் துணை ஆணையர் சந்தீப் சக்‌ஷேனா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இது வீட்டிலிருந்து சொந்த கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நினைத்த நேரத்தில் ஓட்டு போடும் முறையல்ல.  


சென்னை வாக்காளர் டெல்லியில்  இருக்கிறார் என்றால், இ-ஓட்டு போடுவதற்கு அவர் தேர்தல் அதிகாரியிடம்  முன்கூட்டிய  விண்ணப்பிக்க வேண்டும். 


அவர் வாக்களிக்க டெல்லியில் உள்ள  தேர்தல் ஆணையம் அமைக்கும் இடத்தில் அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து,  இந்த இ-ஓட்டு வசதியை பயன்படுத்தலாம்.


பிரத்யோக இன்டர்நெட் லைனில்,  பயோ-மெட்ரிக் கருவிகள் மற்றும் வெப் கேமிரா உட்பட பல கருவிகளுடன்  அமைக்கப்பட்ட மையத்திலிருந்து இந்த எலக்ட்ரானிக் ஒட்டுக்களை போடலாம்.


 வாக்காளர் அடையாள அட்டை  சரிபார்க்கப்பட்டு,  அதன் பிறது எலக்ட்ரானிக் வாக்குச்சீட்டு  உருவாக்கப்படும் (ஸ்மார்ட் கான்ட்ராக்ட்).  வாக்காளர் எலக்ட்ரானிக் வாக்குச் சீட்டில், ஓட்டு பதிவு  செய்தவுடன், அது பாதுகாப்பாக எலக்ட்ரானிக் முறையில் மறைக்கப்பட்டு பிளாக்  செயின் ஹேஸ்டாக்  உருவாக்கப்படும்.
இந்த ஹேஸ்டாக் அறிவிப்புகள்,  வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்படும்.


இந்த இ-ஓட்டுக்கள்  ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக மதிப்பீடு செய்ப்படும்.  இந்த இ-ஓட்டு முறைக்காக ‘பிளாக் செயின்’  என்ற தொழில்நுட்பம்  பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் தற்போது ஆய்வு நிலையில் உள்ளது. 


இந்த தொழில்நுட்பம் ஒத்துக் கொள்ளப்பட்டால், இது குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை செய்யப்பட்டு, தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள்  கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image