திருப்பூர்; பல்லடத்தில் உள்ள வாங்கியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி
தாராபுரம் தம்புரெட்டிபாளையம் மேட்டாங்காட்ட தோட்டத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில்:-

 

நான் விவசாயம் செய்து வருகிறேன். பனியன் தொழிலும் தெரியும். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு வரை கொடுவாயில் உள்ள பூமா பனியன் கம்பெனியில் அயர்ன், பேக்கிங், சூப்பர்வைசராக வேலை செய்து வந்தேன். அப்போது திண்டுக்கல் மாவட்டம் தெப்பக் குளத்துப்பட்டி அருகில் உள்ள அழகுப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் ஜெ.ராஜா என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல்லடத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறினார்.


 

இதனை நானும், எனது குடும்பத்தினரும் நம்பினோம். அதன்படி அவருக்கு பல்வேறு கட்டங்களாக ரூ.25 லட்சம் வரை கொடுத்துள்ளேன். இந்த பணத்தை அவரது உறவினர் பிரேம்குமார் என்பவர் வாங்கி சென்றார். ஆனால் இதுவரை அவர்கள் வங்கியில் வேலை வாங்கி தரவில்லை. எனக்கு பணமும் வழங்கவில்லை. அவர்களின் செல்போன் எண்ணும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தலைமறைவாக உள்ளனர். எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image