திருப்பூர்: பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் அபாரம்!

திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மாணவர்கள் ரோலர்ஸ் கேட்டிங்கில் சிறந்த முறையில் விளையாடி பரிசுகளை பெற்றனர்.
மாவட்ட அளவிலான ரோலர்ஸ் கேட்டிங் போட்டி கோயம்புத்தூரில் உள்ள வ.உ.சி.மைதானத்தில் நடைபெற்றது. அதில் சுமார் 350 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அப்போட்டி வயது வாரியாக நடைப்பெற்றது. இதில் திருப்பூரைச் சேர்ந்த ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவ மாணவியர்கள் பிரியதர்ஷன் ரிங்1, ரிங்2, இரு போட்டிகளிலும் முதல்இடம், தருணிஷ் ரிங்1,இரண்டாம் இடம், ரத்தினவேல் ரிங்1,ரிங் 2,மூன்றாமிடம், நரேன் ரிங், இரண்டாம்இடம், சோட்டன்ராஜ் ரிங் 2, இரண்டாம் இடம், நகுல் ரிங்1, மூன்றாம் இடம்  பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் பெற்று சாதனை  படைத்தனர்.தனி நபர் பிரிவில் பிரியதர்ஷன் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றார்.






வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன்,  இணை இயக்குனர் வைஷ்ணவி நந்தன், பள்ளி முதல்வர் துணை முதல்வர் மற்றும் பயிற்சியாளர் பாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.




Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image