36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்தியது ஏர்டெல்

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில், பத்தாயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்திவிட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.


தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் இருந்து மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை செலுத்தத் தவறியது தொடர்பான வழக்கில், நிலுவைத் தொகையை உடனே செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.


ஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதைத் செலுத்தத் தவறியதை அடுத்து, அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் கம்பெனி இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போவதாக கடந்த 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. 


இதை அடுத்து , ஏர்டெல் நிறுவனம் இன்று 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விட்டதாகவும் எஞ்சிய தொகையை, வழக்கின் அடுத்த விசாரணை தினமான மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளது.


 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image