திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் CAA-NRC-NPR சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவர் பாரிஸ்டர் அசாதுதீன் உவைசி சாஹிப் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்: வாணியம்பாடியில் ஷாயின் பாக் துவங்குங்கள் என்று அறிவுறுத்தினார்.
அதன்பேரில் வாணியம்பாடியில் ஷாயின் பாக் துவங்கியது. இதையடுத்து CAA-NRC-NPR சட்டங்களை திரும்பப் பெறும்வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என்று வாணியம்பாடி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில தலைவர் டி.எஸ் வக்கீல் அஹ்மத் பேசியபோது நம் போராட்டம் இன்னும் வீரியம் அடையவேண்டும் இந்தியா முழுவதும் ஒரே அணியின் கீழ் கட்சி அமைப்பு இயக்கங்கள் எல்லாம் தவிர்த்துவிட்டு எந்த கட்சி சார்ந்த கொடியும் இல்லாமல் தேசிய கொடி ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசினார்.