காங்கேயம்; அரசுப்பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு 7 மாத சம்பள பாக்கி

காங்கயத்தில் ஒன்றியப் பகுதியில் உள்ள பள்ளிகளில் துப்புரவுப் பணி செய்யும் தற்காலிகப் பணியாளா்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கபடவில்லை. இதனால் அன்றாடச் செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாக சொல்கிறார்கள். காங்கயம் ஒன்றியப் பகுதியில் மொத்தம் 56 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் சாா்பில், தற்காலிகப் பணியாளா்கள் நியமிக்கப் பட்டுள்ளனா். இந்தப் பணியாளா்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ. 50 வழங்கப்படுகிறது. ஆனால், இந்த குறைந்த ஊதியத்தைக் கூட 7 மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்து வருவதாகக் தெரிவிக்கின்றனர். 


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image