பெருமாநல்லூர்; காளம்பாளையளம் பகுதயில் வழிப்பறி செய்த இருவர் கைது


அவினாசி பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 25 . திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பெருமாநல்லூர் அருகே காளம்பாளையளம் பகுதியில் சென்று கொண்டிருந்த சதீசை 2 நபர்கள்  திடீரென்று வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பிடுங்கி செய்தனர்.



அப்போது சதீஷ் சத்தம் போட்டதால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, வழிப்பறி செய்த 2 நபர்களையும் பிடித்து பெருமாநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் வயது 26, காட்டன் மில் ரோடு பகுதியை சேர்ந்த முரளி என்ற மலர்மன்னன் வயது 24 என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் கோகுலகிருஷ்ணன் மீது அவினாசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. 

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image