அவினாசி பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 25 . திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பெருமாநல்லூர் அருகே காளம்பாளையளம் பகுதியில் சென்று கொண்டிருந்த சதீசை 2 நபர்கள் திடீரென்று வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பிடுங்கி செய்தனர்.
அப்போது சதீஷ் சத்தம் போட்டதால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து, வழிப்பறி செய்த 2 நபர்களையும் பிடித்து பெருமாநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் வயது 26, காட்டன் மில் ரோடு பகுதியை சேர்ந்த முரளி என்ற மலர்மன்னன் வயது 24 என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் கோகுலகிருஷ்ணன் மீது அவினாசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.