திருப்பூர்; ரூர்பன் திட்டம். இயக்குனர் திடீர் ஆய்வு.







திருப்பூர் மாவட்டம், தெக்கலூர் ஊராட்சியில் நடைபெறும் ரூர்பன் திட்ட பணிகளை மாநில ஊரக வளர்ச்சிித்துறை இயக்குனர் கே.எஸ்.பழனசாமி ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நகர்புறத்திற்கு இணையான வசதிகளை கிராம பகுதியில் மேம்படுத்த  மத்திய அரசு ரூர்பன் திட்டத்தை அறிமுக படுத்தி கிராமங்களை செழுமையாக்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெக்கலூர் ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சாலை பணிக்கு ரூ 35 லட்சமும், சோலார் மின்கட்டமைப்பு பணிக்கு ரூ 10 லட்சமும் ஒதுக்கி, தற்போது அப்பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில்  சென்னையில் இருந்து மாநில ஊரக வளர்ச்சி.துறை இயக்குனர் கே.எஸ் பழனிச்சாமி  தெக்கலூர் ஊராட்சிக்கு வந்து ரூர்பன் திட்டம் நடைபெறும் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். தெக்கலூர் ஊராட்சியில் சேலம் -  கொச்சி செல்லும் சாலை முதல் வடுகபாளையம் வரை போடப்படும் சாலை மேம்பாட்டு பணியை ஆய்வு செய்தார். பின்னர்  தெக்கலூர், காமநாயக்கன்பாளையம். சோலார் மின்கட்டமைப்பை பார்வையிட்டு, அதன் பயன்பாடுகள்  சேமிப்பு விபரங்களை மற்றும் செலவினம் குறித்து கேட்டறிந்தார். 


இந்த ஆய்வின் போது மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், பொறியாளர்கள் கணேசன், கோகுல், தெக்கலூர் ஊராட்சி தலைவர் மரகதமணி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். 










 


 

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image