வெள்ளகோவில் அருகே தனக்கு தானே தீ வைத்து பெண் தற்கொலை




திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அறிவொளி நகரில் வசித்து வருபவர் ராமசாமி. இவரது மனைவி விஜயா வயது40. இவர்கள் இருவருமே கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று  ராமசாமி, அவரது மகன், மகள்கள் வெளியில் சென்றுவிட்டனர். விஜயா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென தனக்கு தானே தீ வைத்துள்ளார். தீ உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் விஜயா சத்தம் போட்டார்.

அவரது சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் விஜயாவின் உடலில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக விஜயா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜயா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



 


 



 


 


 















 



 





Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு