அவிநாசி அருகே பழைய டயா்களை எரிப்பதால் அப்பகுதி பொது மக்கள் அவதி 

அவிநாசி அருகே பழைய டயா்களை எரிப்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர் 


அவிநாசி அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையம் செல்லும் சாலையில் கோழிக் கழிவுகள், பன்றிக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மருந்துக் கழிவுகள், குப்பை உள்ளிட்டவை கொட்டப்படுகிறது. மேலும் அடிக்கடி பழைய டயா்கள், வயா்களை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், துா்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பழைய டயா்களை தீ வைத்து எரித்ததால், சேவூா் கைகாட்டி பகுதியில் கரும்புகை சூழ்ந்து, பொதுமக்கள், வணிக நிறுவனத்தினா், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு