இளைஞர்களிடம் கலாசாரத்தை கொண்டு செல்லும் சிவராத்திரி ஈஷா யோகா மையத்தில் வெங்கய்யா நாயுடு பேச்சினார்.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டு தோறும் விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
அவர் பேசும்போது, மஹா சிவ ராத்திரியானது, மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல ஆற்றலை வெளிக்கொண்டு வர சந்தர்ப்பம் தருகிறது என்று தெரிவித்தார். இது போன்ற விழாக்கள், இளைஞர்கள் மத்தியில் நமது கலாசாரத்தை கொண்டு செல்ல வாய்ப்பாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
யோகா என்பது கலை, அறிவியல், அமைதி, செல்வம் என்றும் அவர் தெரிவித்தார். யோகாவை அரசியல், மத ரீதியான பார்வையில் பார்க்கக்கூடாது என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார். சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தில், விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் களை கட்டின. தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் இவ்விழாவிற்கு வந்திருந்தனர்.