ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து கருத்து தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்


திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்களை பகிரும் வகையில் 24 கேள்விகள் அடங்கிய புதிய செயலியை க்யூ ஆர் கோட் மூலம் பதிவிறக்கம் செய்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் முறையை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அறிமுகம் செய்து வைத்தார்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நான்கு பழைய மார்கெட்டுகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் எனவும், பழைய பேருந்து நிலையம் நவீன முறையில் மாற்றி கட்டப்படும் பணிகள் துவங்கி உள்ளதாகவும், அம்ருத் திட்டத்தின் கீழ் 4வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி ஆற்று நீர்  கொண்டு வரும் இப்பணி 2022ம் ஆண்டு நிறைவடையும் என தெரிவித்தார், மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் இல்லாத பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  வரும் 10ம் தேதி திங்கட்கிழமை  அன்று பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image