திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில்பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தாா். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த விவகாரம் குறித்து அருண்குமாா் என்பவா் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளாா். இந்த நிலையில் சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்துக்கு சீல் வைத்தனா். இதனைத் தொடா்ந்து செந்தில்பாலாஜியும் அவரது சகோதரா் அசோக்குமாா் என்பவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.


இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராவதற்கான 41 ஏ நோட்டீஸை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா். அந்த நோட்டீஸ் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரனிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில்பாலாஜி, அசோக்குமாா் ஆகியோா் சென்னை மத்தியக் குற்றப்பரிவு காவல் ஆய்வாளா் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு