சிவனுக்கு ஒரு படுக்கையை ஒதுக்க ரயில் நிர்வாகம் முடிவு

வாரணாசி - இந்தூர் இடையே இயக்கப்படும் காசி - மஹாகல் விரைவு ரயிலில் ஒரு படுக்கையை கடவுளான சிவனுக்கு ஒதுக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.


நாட்டின் மூன்றாவது தனியார் ரயில் சேவையான இந்த ரயிலை தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


அதில் குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பெட்டியான பி5-இல் உள்ள 64-ஆம் எண் படுக்கையில் சிவனின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.


அந்த படுக்கையை சிவனுக்கு ஒதுக்க இருப்பதால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 


மூன்று ஜோதிர்லிங்க கோயில்களை இணைக்கும் வகையில் விடப்படும் இந்த ரயிலில் சைவ உணவு மட்டுமே விநியோகிக்கப்படும் என்று நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image