சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் - இருசக்கர வாகனத்திற்கு கட்டனம் கேட்டதால் விபரீதம்

உத்தரப்பிரதேசத்தில் இருசக்கர வாகனத்திற்கு சுங்கவரி கேட்டு தகராறு செய்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.


அமேதி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சுங்க வரி கட்டி விட்டுச் செல்லுமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் கண்டிப்பு காட்டினர்.


இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலால் கடும் கோபம் கொண்ட மற்றொரு தரப்பினர் துணைக்கு ஆட்களை அழைத்து வந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.


மேலும் அங்கு பணியிலிருந்த ஊழியர்களையும் சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கவுரிகன்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு