காசிபாளையம் பிரிவு அருகே பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் பலி

திருப்பூரில் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் பலியானார். திருப்பூா், விஜயாபுரத்தை அடுத்த அங்காளம்மன் நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் வீரகுமாா் (22). இவா் திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முடி வெட்டும் கடையில் வேலை பாா்த்து வந்தாா். நல்லூா், காசிபாளையம் பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.




அப்போது, காங்கயத்தில் இருந்து திருப்பூா் நோக்கி வந்த தனியாா் பேருந்து வீரகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய வீரகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்துகுறித்து திருப்பூா் ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.



Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு