திருப்பூர்; கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய குட்டீஸ்களுக்கு பொதுமக்கள் குட்!




திருப்பூர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து  விடுபட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாங்களாகவே முன்வந்து வழங்கிய மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபட தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள், மால்கள், கேளிக்கை விளையாட்டுகள் மூடல் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை என பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 7  கொரோனா தடுப்பு முகாம்கள் அமைத்தும் பொதுமக்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 






இதைத்தொடர்ந்து திருமுருகன் பூண்டி காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் கை கழுவும் முறை மற்றும் கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களிடையே விழிப்புணவை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி  நடந்தது. அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி அனிஷ் ஃ பாத்திமா தலைமையில் அப்பகுதியில்  2 ம் வகுப்பு முதல்,  பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகள் ஜெயலட்சுமி, தமிழ்செல்வன், கவின், கோபிகா, ஃபஹீமா பர்வீன்.ஆகியோர்   ஒன்றிணைந்து  தாங்களாகவே முன்வந்து இதனை செய்ய முடிவு செய்து நெசவாளர் காலனி மற்றும் நெசவாளர் காலனி விரிவாக்கம், சூர்யா நகர் பகுதி முழுவதும் துண்டு பிரசுரம் வழங்கியும்,  கை கழுவும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும்  ஏற்படுத்தினர். இதனை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.



அதே போல் திருப்பூர், அவிநாசி டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அக்னி துளிர்கள் அறக்கட்டளை சார்பில் அவிநாசியில்  பல பகுதிகளில் “கொரோனோ” வைரஸ் தடுப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அக்னி துளிர்கள் அறக்கட்டளை தலைவர் பிரேமானந்தம், செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ” கொரோனோ “வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவிநாசி பஸ் நிலையம், பள்ளிவாசல், அவினாசியில் உள்ள 18 வார்டுகள், அவிநாசி ஒன்றிய பகுதியில் உள்ள நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர், முறியாண்டாம்பாளையம், வேலாயுதம்பாளையம் பஞ்சாயத்து பகுதிகளிலும் வழங்கினர். 


 





  




Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image