திருப்பூர்: 100 தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவளித்த குடியிருப்புவாசிகள்.
திருப்பூர் குமார் நகர் பகுதியில் 144 தடை உத்தரவால்  வெளியூருக்கு செல்ல முடியாமல் உணவின்றி தவித்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் உணவளித்து ஆதரவளித்தனர்.


கடந்த 24ந் தேதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவுவை அடுத்து பல்வேறு ஊர்களை சார்ந்தவர்கள் ஊருக்கு செல்ல முடியாமல் ரெயில் நிலையங்களிலும் பிளாட்பாம்களிலும் உணவின்றி சுற்றி திரிந்தவர்களை தானக முன்வந்து  அவர்களுக்கு தேவையான உணவுகளை அளித்து வருகின்றனர. 

மேலும் இவர்களுக்கு ரோட்டரி சங்கம், சேவா சமிதி மற்றும் அப்பகுதியை சேர்ந்த  தொண்டு நிறுவனங்கள் காலை மதியம் மற்றும் இரவு  ஆகிய 3 வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமார் நகர் முருங்கப்பாளையம் அரசு குடியிருப்பு அருகில் குடியிருந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலையிலல்லாமல் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு முருங்கபாளையம்  ஹவுசிங் யூனிட் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஜாபர் அலி, மும்தாஜ், விஜயா, புஷ்பலதா, ஆமினா பீவி, வனிதா ஆகியோர்கள் உணவு ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழங்கினர்.உணவின்றி

தவித்த 100க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு  அப்பகுதி பொதுமக்களும் பாராட்டினர்.  

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image