கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பால் விற்பனைக்கடைகள் திறந்திருக்கலாம் என்றும் ஆனால் அதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனையின்போது விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையிலும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் உழவர் சந்தை நிர்வாகம், காய்கறி தொகுப்பினை ஒரு பையில் வைத்து விற்று வருகிறது. இப்படி உருவாக்கப்பட்ட, காய்கறி தொகுப்பு ரூ.150க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கத்தரிக்காய் 1/2 கிலோ
- தக்காளி 1 கிலோ,
- வெண்டைக்காய் 1/4 கிலோ
- அவரைக்காய் 1/2 கிலோ
- முருங்கைக்காய் 1/4 கிலோ
- பச்சைமிளகாய் 1/4 கிலோ
- பீன்ஸ் 1/4 கிலோ
- கேரட் 1/4 கிலோ
- உருளைக்கிழங்கு 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் 1/4 கிலோ
- பெரிய வெங்காயம் 1/2 கிலோ
- கறிவேப்பிலை, புதினா,
- கொத்தமல்லி ஒரு கொத்து,
- கீரை ஒரு கட்டு,
- சவ்சவ் 1,
- நூக்கல் 1/4 கிலோ
- முள்ளங்கி 1/4 கிலோ
- வாழைக்காய் 3,
எலுமிச்சை 4 ஆகிய காய்கறிகள் ரூ.150க்கு இருந்த இடத்திலேயே தேடி அலையாமல் கிடைப்பதால் மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இது போல் நடை முறையை அணைத்து ஊர்களிலும் கடைபிடித்தால் பொதுமக்களுக்கு பயனாக இருக்கும்.