நாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 16 இடங்கள்; தமிழகத்தில் ஈரோடு மாவட்டம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயம் அதிகமாகவும், அதிக எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய 16 பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


அவைகள் தமிழகத்தில் ஈரோடு, தில்ஷாத் கார்டன், நிஜாமுதீன் டெல்லி, பத்தினம்திட்டா, காசர்கோடு கேரளா, நொய்டா, மீரட் உத்தரப்பிரதேசம், பில்வாரா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், மும்பை, புனே, மகாராஷ்டிரா, அகமதாபாத், குஜராத், இந்தூர் மத்தியப் பிரதேசம், நவன்ஷஹர் பஞ்சாப், பெங்களூர் கர்நாடகா மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள். இந்த 16 இடங்களிலும், கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. எனவே, இப்பகுதியில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25ஐ நோக்கி உயர்ந்துள்ளது. ஈரோட்டில் 16,456 குடும்பங்களைச் சேர்ந்த 57,734 நபர்கள் தனிமைப்படுத்தப் பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.





Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image