நித்தியானந்தாவுக்கு கொரோனாவா; சற்சங்கம் வராததால் சிஷ்யர்கள் அதிர்ச்சி

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இந்தியாவில் பலாத்கார வழக்கில் சிக்கி தப்பி ஓடியவர் நித்தியானந்தா. இவர் பசிபிக் கடற்பரப்பில் ஏதோ ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அந்த தீவையே கைலாசா என்கிற இந்து நாடு எனவும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார். அந்த நாட்டுக்கும் நித்தியானந்தா தான் பிரதமர் என்றும் தெரிவித்து வந்தார். நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி என்பதால் அவர் தேடப்பட்டு வருகிறார். இண்டர்போல் போலீஸும் நித்திக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இந்த நிலையில் கொரோனாவே தாக்காத தேசம் எங்களுடைய கைலாசா என கிண்டலடித்து பேசி வந்தார் நித்தியானந்தா. இதற்கும் அசரவைக்கும் ஆன்மீக விளக்கங் களையும் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த 2 வாரங்களாக நித்தியானந்தா குறித்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்தான் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப் பட்டிருக்கின்றன.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

நித்தியானந்தாவின் கைலாசாவும் அந்த பிராந்தியத்தில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நித்தியானந்தாவின் கைலாசாவும் கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கிறதா? அதில் இருந்து நித்தியானந்தா தப்பினாரா? என்ன ஆனார்? என்பது அவரை மீம்ஸ் நாயகனாக கொண்டாடும் நெட்டிசன்களும் நம் மக்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image