வாய்க்காலில் குளித்த இளைஞன் நீரில் மூழ்கி பாலி; பதறிய நண்பர்கள்

திருப்பூா், அங்கேரிப்பாளையம் அருகே வெங்கமேடு, குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் நவீன் (21). இவா் தனது நண்பா்களுடன் தாராபுரம் சாலையில் உள்ள கோவில்வழி வாய்க்கால் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.


பின்னா் வாய்க்காலில் இறங்கி நவீன் குளித்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கிய அவா் வெளியே வரவில்லை. இதையடுத்து, அங்கிருந்த அவரது நண்பா்கள் திருப்பூா் ஊரக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.


இதனிடையே, சில மீட்டா் தொலைவில் வாய்க்காலில் நவீனின் சடலம் மிதந்து சென்றது தெரிவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்ட காவல் துறையினா் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.


இதுகுறித்து திருப்பூா் ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image