முப்பெரும் விழா கோலாகல கொண்டாட்டம் -அசத்திய பெரிச்சிபாளையம் மாநகராட்சி பள்ளி

வருடாவருடம் திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் பள்ளி ஆண்டுவிழா, பணி நிறைவுபெறும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா மற்றும் அறிவியல் தின விழா என முப்பெரும் விழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் E. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்  பள்ளி நிர்வாகம் மிக சிறப்பாக செயல்படுவதாகவும் இதற்காக முழு முயற்சி எடுத்து சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று பேசினார்.

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


கிராம கல்விக்குழு தலைவர் எஸ்.சிவசரண்யா முன்னிலை வகித்தார். இவர் பேசுகையில் என் பள்ளி என்று ஆரம்பித்தார். தனியார் பள்ளிக்கு நிகரான ஒரு கட்டமைப்பை உருவாக்கி மிக சிறப்பாக நிர்வகித்து வரும் தலைமை ஆசிரியருக்கும் அவரது செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பள்ளியை இந்த அளவிற்கு முன்னேற்ற பாதையில் பயணிக்க உதவும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பேசினார்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


தலைமை ஆசிரியர் ஞானம்மாள் வரவேற்றப்புரையாற்றினார். அவர் பேசுகையில் எங்களது பள்ளியின்  இந்த முன்னேற்றத்திற்கு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், கிராம கல்விக்குழு, முன்னாள் ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், இங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள். பெற்றோர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தான் கரணம். நான் முழு அர்ப்பணிப்புடன் எனது வேலையை திறம்பட செய்தேன். அனைவரது ஒத்துழைப்பால் தான் இவைகள் சாத்தியம் ஆனது. மாவட்ட மாநில அளவில் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெற்று பள்ளியின் பெருமையை வளர்த்து  வருகின்றனர். வரும் காலங்களில் நிறைய சாதனை புரிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது இவ்வாறு பேசினார். 


இடைநிலை ஆசிரியர் சூ.வளர்மதி ராய் ஆண்டறிக்கை வாசித்தார். மேலும் எம்.ஆர்.ரத்தினசாமி, என்.நாகப்பன், முன்னாள் ஆசிரியர் ஆர்.கந்தசாமி, முன்னாள் ஆசிரியர் கனகராஜ், என்.தெய்வசிகாமணி, ஆதவன் முருகேசன், தம்பி குமாரசாமி, என்.ஜெகநாதன், ஜோதி சிவபாக்கியம்,


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


வெள்ளியங்காடு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, கருமாரம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் உமாசந்தி, முத்துநகர் பள்ளி தலைமை ஆசிரியர் அன்புச்செல்வி, சுகுமார்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா, கோல்டன் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் தேவகி, பாண்டியன் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப், பழவஞ்சி பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், திருக்குமரன் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு  

மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


தலைமை ஆசிரியர், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. புரவலர் திட்டத்தின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் பள்ளிக்கு நன்கொடை கொடுத்து உதவியவர்களுக்கும் பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர்.  


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur

 

மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் மனநலம் குன்றிய மாணவிகளின் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்க்கு நாடகம் அனைவரையும் கவர்ந்தது. மாணவர்களின் பிரமிடு நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சர்யப்படும் படியாக இருந்தது. 

அதனை தொடர்ந்து மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவை பெற்றோர்கள் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்துகொடு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர் 



 



Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image