தன் தங்கையை கை,கால்களை கட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை -சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை வில்லிவாக்கத்தில் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


கைது செய்யப்பட்ட சிறுவனின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்ட நிலையில் தாய் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் 15 வயதுள்ள அந்த சிறுவன் அவரது தங்கை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தாயும், தந்தையும் இல்லாத நேரத்தில் தங்கையின் கை,கால்களை கட்டி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 


கடந்த டிசம்பர் மாதம் முதல் பல முறை சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளித்தோழியிடம் தெரிவித்துள்ளார். தோழி மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சிறுவனை கைது செய்து காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறுவன் செல்போன் வைத்திருந்ததை அடுத்து இது தொடர்பாக வீடியோ பதிவு எதுவும் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image