கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக
தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,
சு.குணசேகரன் வழங்கிய நடமாடும் மருத்துவமனை (ஆம்புலன்ஸ்) வாகனம் மூலம் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர மருத்துவ பரிசோதனை நடந்தது.
திருப்பூர் மாநகரட்சிக்குட்பட்ட
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த ஆணையிட்டதின் அடிப்படையில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், "அம்மா டிரஸ்ட்" நிறுவனருமான
சு.குணசேகரன், திருப்பூர் மாநகரட்சிக்குட்பட்ட60 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் மருத்துவர்கள்
கொரோனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக திருப்பூர் மாவட்ட அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மூலம், மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார் வசம் வழங்கிய
நடமாடும் மருத்துவமனை (ஆம்புலன்ஸ்) வாகனம் மூலமாக கடந்த 17, 18, 19, 20 ஆகிய நான்கு நாட்கள் ராயபுரம், சூசையாபுரம்,
பெரியாண்டிபாளையம், எஸ்.ஆர்.நகர், பாரப்பாளையம், கே.வி.ஆர்.நகர், கருவம்பாளையம், ராக்கியாபாளையம், ஆர்.இ.வி.லே-அவுட் தென்னம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளடக்கிய 100 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவைபடுகின்றவர்களுக்கு
மருந்துகள் வழங்கப்பட்டது.