தினமும் தலா 1000 பேருக்கு 5 வகை சாதம், முட்டை மற்றும் வாழைப்பழம்; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.

வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சார்பில், அம்மா உனவகங்களில் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை, தினமும் தலா ஆயிரம் பேருக்கு 5 வகை கலவை சாதம், முட்டை மற்றும் வாழைப்பழம் ஆகியவை எம்.எல்.ஏ சு.குணசேகரன் சொந்த செலவில் வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி காங்கேயம் ரோடு, நல்லூர் அம்மா உணவகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் முன்னிலையில், எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். இதில் 3வது மண்டல உதவி ஆணையாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் கனகராஜ், சுகாதார அலுவலர் பிச்சை, ரோபோ ஆனந்த், அம்மா உணவாக பொறுப்பாளர் கோமதி சம்பத், தம்பி சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு