திருப்பூர்; 1000 நபர்களுக்கு கபசுரக் மூலிகை குடிநீர். ஜி.கே.விவசாயமணி வழங்கினார்!!
திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு காலை மற்றும் மாலை என தினசரி 2 வேளை கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காலை மற்றும் மாலை 2 வேளை கபசுர மூலிகை குடி நீர் சுத்தமான, சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.கொரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் இது உதவும் என்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்றும் அறிவியல் ரீதியாக தெரிய வருகிறது.


இன்று சுமார் 1000 பேருக்கு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி.கே.விவசாயமணி கபசுர மூலிகை குடிநீர் வழங்கினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடை வெளியையும் கடைப்பிடித்தும்  இந்த மூலிகை குடிநீர் வாங்கி அருந்தினர். 

 

 

 

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image