நெலக்கோட்டை யில் நடைபெற்ற இரத்த தான முகாமில் 20 பேர் இரத்த தானம்

நெலக்கோட்டை யில் நடைபெற்ற இரத்த தான முகாமில் 20 பேர் இரத்த தானம் செய்தனர்.



கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் கூடலுர்‌ குருதிக் கொடையாளர்கள் குழு ஆகியன சார்பாக இரத்த தான முகாம் நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.


இந்த முகாமிற்கு இரத்த வங்கி மருத்துவ அலுவலர் முனிவேல் தலைமை தாங்கினார். கூடலூர் குருதி கொடையாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், குணசீலன், ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கூடலூர் இரத்த கொடையாளர் குழுவை சேர்ந்த 20 பேர் இரத்த தானம் செய்தனர். கொரோன நோய்தொற்று குறித்து பயம் பரவி உள்ள நிலையில் தானம் செய்ய தாமாக முன் வந்தவர்களை மருத்துவ குழுவினர் பாராட்டினார்.


Popular posts
சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த சாரைப்பாம்பு... செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் ஓட்டம் 
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020