பல்லடம் அருகேயுள்ள மலையடிபாளையத்தில் வீசிய பலத்த காற்றால் ரூ.20லட்சம் மதிப்புள்ள தகர கொட்டகை சேதம் அடைந்தது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ளமலையடிபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றால் தகர கொட்டகை சேதம் அடைந்தது. பல்லடம் அருகேயுள்ள மலையடிபாளையம் கிராமத்தில் பவித்ரா என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. அதில் 7070 சதுரடி பரப்பளவிற்கு ரூ.20லட்சம் மதிப்பில் புதிய தகர கொட்டகை செட் அமைக்கப்பட்டு வர்ணம் அடித்தல் உள்ளிட்ட இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வந்ததன..இந்த நிலையில் நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் மழையால் தகர கொட்டகை செட் நாசம் அடைந்தது. தகவல் அறிந்தவுடன் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.