தேவையில்லாமல் சுற்றிவந்த 383 பேர் கைது, 305 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூரில் முழு ஊரடங்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மாநகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர். இருப்பினும் நேற்று காலை தேவையில்லாமல் சுற்றிவந்த வாகன ஓட்டிகளை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 7 மணி வரை திருப்பூர் மாநகரில் மொத்தம் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 123 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 104 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


இதுபோல் நேற்று இரவு 7 மணி வரை திருப்பூர் புறநகரில் போலீசார் 260 வழக்குகள் பதிவு செய்து 260 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று மொத்தம் 383 பேர் கைது செய்யப்பட்டனர். 305 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு