திருப்பூரில் தயாரிக்கப்பட்ட 4 லட்சம் முககவசங்கள் கேரளாவுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை கொண்டு செல்ல சென்னை-சொரனூர் வரை சிறப்பு சரக்கு ரயில் இயக்கப் பட்டு வருகிறது. கேரள மாநிலம் சொரனூரில் இருந்து நேற்று அதிகாலையில் புறப்பட்ட ரயில் காலை 6.45 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. திருப்பூரில் இருந்து சென்னைக்கு 11 பண்டல்களில் 50 ஆயிரம் முககவசம் அனுப்பி வைக்கப்பட்டது. இது போல் சென்னையில் இருந்து சொரனூர் நோக்கி சென்ற ரயில் நேற்று மாலை திருப்பூர் வந்தது. இந்த ரெயிலில் 86 பண்டல்களில் 4 லட்சம் முககவசம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை திருப்பூர் ரெயில் நிலைய வணிகப்பிரிவு மேலாளர் முத்துக்குமார் தலைமையில் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
திருப்பூரில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலமாக 4 லட்சம் முகக்கவசங்கள்