கோவையில் இருந்து, சென்னைக்கு 6 நாட்கள் சரக்கு இரயில் செல்ல உள்ளதால், கொவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பார்சல் அலுவலகத்தை அனுகலாம் என சேலம் இரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாளை 09.04.2020 முதல், வருகின்ற 14.04.2020 (6 நாட்கள்) வரை மட்டும் கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு சரக்கு இரயில் (பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ்) இரண்டு (2) பெட்டிகளுடன் செல்லவிருக்கிறது (கொள்ளளவு-31 டன்).வாடிக்கையாளர்கள் தங்கள் சரக்குகளை சென்னைக்கு அனுப்ப விரும்பினால் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் இரயில்வே பார்சல் அலுவலகங்களை அணுகலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு கோயமுத்தூர்-7012592712, 9003956955 திருப்பூர்-9543152339, 9600956238 ஈரோடு-9443990801 9600956231, சேலம்-9443840720, 9003956957 எண்களை தொடர்பு கொள்ளவேண்டப்படுகின்றனர்.
இந்த சிறப்பு பார்சல் இரயில் காலை 08.00 மணிக்கு கோயமுத்தூரிலிருந்து கிளம்பி இரவு 08.30 மணிக்கு சென்னை சென்றடையும். அதற்கு முன்பாக குறிப்பிட்ட அலுவலகங்களை அணுகலாம் என கேட்டு கொள்ளப்பட்டுகின்றனர்.