உடுமலையில் கொரோனா பாதித்த 7 பேரில் 3 பேர் குணமாகி வீடு திரும்பினார்
உடுமலையில் இருந்து டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்த 10 பேர் கடந்த 3-ந்தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், 3 பேரில் ஒருவருடைய மனைவி மற்றும் மகள் ஆகிய 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் உடுமலை அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதால் அவர் கடந்த வாரம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.




 

இந்த நிலையில் உடுமலையில் இருந்து முதலில் கோவைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்த 3 பேரும் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் அவர்கள் 3 பேரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 7 பேரில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.




 

மற்றொருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாகக் கண்டறியப் பட்டதால் அவர் நேற்று முன்தினம் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரையும் சேர்த்து உடுமலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

 

இவர்களில் 3 ஆண்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நர்சு உள்பட 3 பெண்களும், ஒரு ஆணும் என 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடுமலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் குடியிருந்து வந்த பகுதிகள் அடைக்கப்பட்டு, அங்கு குடியிருப்பவர்கள் அந்த பகுதிக்குள்ளேயே இருக்கும்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image