உதவி கேட்டு வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்கு

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி பிச்சாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் நிவாரண உதவி கேட்டு வீடியோ ஒன்றை வாட்சப்பில் பகிர்ந்தனர்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


அந்த வீடியோவில் ஊர் மக்கள் சிலர் நெருக்கமாக நின்று கொண்டு ஊரடங்கு உத்தரவால் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். வருமானம் இல்லாமல் உணவிற்கு மிகவும் சிரமப்படுகிறோம். யாரவது முன் வந்து உதவ வேண்டுகிறோம் என்று ஒரு பெண் பேசியிருந்தார். 


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியே வரும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுத்தப் பட்டிருக்கிறது.


நெருக்கமாக நின்று பதிவிட்டிருந்த வீடியோவை பார்த்த வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார் சேவூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பிச்சாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர், ஊரடங்கு உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், ஒன்றாக கூடி நிற்கிறார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதன் பேரில் சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image