பூட்டை உடைத்து மது பாட்டில் கடத்தல்; அவிநாசியில் பரபரப்பு

அவினாசி கால் நடை ஆஸ்பத்திரி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக இந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருவர் கடையை திறந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி செல்வதாக அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் தலைமையிலான போலீசார் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லூர்துசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது கடையில் இருந்த 700 மது பாட்டில்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையிலும் சீலை அகற்றி மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு