திருப்பூர்; தூய்மை பணியாளர், பொதுமக்கள் ஆகியோர்க்கு  உணவு பொருட்களை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கல்!!
 

 

 

திருப்பூர், காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் மற்றும் 50 வது வார்டு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு   அரிசி மற்றும் மளிகை பொருட்களை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,சு.குணசேகரன்

வழங்கினார்


திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட ராக்கியாபாளையம் பிரிவு, இந்திரா நகர் பகுதி பொதுமக்கள் 215 பேருக்கு, ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை சாமான்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. சு.குணசேகரன் வழங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுல்நாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் அட்லஸ் சி.லோகநாதன், கேஷியர் முருகேசன், ரங்கநாதன், தனபால் ஆகியோர் உடனிருந்தனர்


இதே போல் திருப்பூர் மாநகராட்சி 50 வது வார்டில் பணிபுரியும் 75 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் ரூபாய் 1000 மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் நா.கணேசன், எஸ்.பி.டெக்ஸ் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு