கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க நான் இடம் தருகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை வேறு பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அம்பத்தூரில் ஏற்கெனவே ஆந்திர மாநில மருத்துவர் பலியான போது அவரை அந்த இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போல் தமிழகத்தில் கொரோனாவால் இறப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை புதைக்க தான் இடம் தருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.