திருப்பூர்; வெளி மாவட்ட, மாநில தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்க கரங்கள்!

திருப்பூரில், கொரோனா வைரஸ் நோயால் 144 தடை உத்தரவில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு காந்தி நகர் ஏ.வீ.பி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் மற்றும்  மாவட்ட  ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. திருப்பூர் காந்தி நகர் ஏ.வீ.பி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் உலகம் முழுவதும் மக்கள் கொரோன வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும்  பல லட்சம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்திய அரசு கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.இதன் மூலம் நோய் தொற்று குறைய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களும் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க கடைகளுக்கு செல்கின்றனர். இதன் மூலம் நோய் தொற்று குறைய வாய்ப்புள்ளது மேலும் கொரோனா வைரஸ் நோயால் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவிடும் வகையில்   அம்மக்ளுக்கு உணவு பொருட்கள் வழங்க திருப்பூர் காந்தி நகர் ஏ.வி.பி லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில்  அனைவருக்கும் அரிசி பருப்பு கோதுமை மாவு மற்றும் ஏராளமான காய்கறிகள் மற்றும் தேவையான பொருட்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட்டது மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஏ.வி.பி.,லேஅவுட் பகுதியில் சுமார் 1500 பேர் வசித்துவரும் அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முக கவசம் அணிய வேண்டும் தனித்திருக்கவும் அடிக்கடி கைகளை சோப்பு நீரால் கழுவ வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.இது குறித்து  ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ரொட்டேரியன் டி.என்.துரை கூறும்போது, மனித நேயம் கொண்ட அனைவரும் இந்த நேரத்தில் மக்களின் பசியைப் போக்க உதவிட வேண்டும். இந்த உதவிகள் செய்ய பெரும் பங்கு அளித்த சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்களது பகுதியில் கொரோன தொற்று இதுவரை யாருக்கும் இல்லை இனிமேலும் வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எங்களோடு மக்களுக்கு உதவி செய்த  அனைத்து நன்கொடையாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image