தக்காளிக்கு தள்ளுபடி வேணும்னா மாஸ்க் போட்டுட்டு வாங்க; அசத்தும் வியாபாரி, பாராட்டிய கலெக்டர்

மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு 15 ரூபாய் தக்காளி 12 ரூபாய் என கூவிக்  கூவி விற்பனை செய்து அசத்திய வியாபாரியை நம்ம ஊரு கலெக்டர் விஜயகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது பழைய பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது.  இங்கு ஒரு தக்காளி கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் தக்காளி கிலோ 15   ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு 12 ரூபாய் என  கூவி விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு கூவி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்த திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அந்த வியாபாரியை பாராட்டியுள்ளார். மேலும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.



Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு