கொரோனா தடுப்பு குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினருடன், முதல்வர், பழனிசாமி இன்று (ஏப்.,9) ஆலோசனை நடத்துகிறார்.


தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு துறைகள் வழியே, ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, மத்திய, மாநில அரசுகள் இடையேயும், மாநிலம், மாவட்டம் இடையேயும், ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு குழு, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி குழு; தனியார் சுகாதாரப் பணிகள் ஒருங்கிணைப்பு குழு உட்பட, 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


இக்குழுவின் உறுப்பினர்களாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இக்குழுவினர் உடனான ஆலோசனை கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்திற்கு, முதல்வர், பழனிசாமி தலைமை வகிக்கிறார். 


கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்புக்கு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டம் முடிந்ததும், முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image