பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் இயங்கி வரும் தனியார் பனியன் சலவை நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார். 24 வயதுள்ள வினோத் என்பவர் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடு காவேரியை சேர்ந்தவர். இவர் அந்த பனியன் நிறுவனத்தின் விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை விடுதி சமையலறையில் பனியன் துணியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் வேலை செய்பவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வினோத் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.