பல்லடம்; கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய மூவருக்கு காப்பு போட்ட போலீஸார்!!





பல்லடம் அருகே வலையபாளையத்தில் 50 லிட்டர் சாராயம் ஊரல் மற்றும் 4லிட்டர் சாராயம் விற்பனை செய்த 3பேரை காமநாய்க்கன்பாளையம் போலீஸார் கடந்த

வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வலையபாளையத்தில் 50 லிட்டர் சாராய ஊரல் போலீஸாரல் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது. பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையம் கிராமத்தில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து காமநாய்க்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சாராய விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் (வயது 42), ஆறுச்சாமி மகன் ராமசாமி (வயது 32), சுப்பன் மகன் பாப்பான் (வயது 40) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.  மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அப்பகுதியில் இருந்த 50 லிட்டர் சாராய ஊரலையும் கண்டுபிடித்து அழித்தனர்.

 


.





Popular posts
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
Image