மனசாட்சி இல்லாத வீட்டின் உரிமையாளர்; வாடகை கேட்டு தம்பதியை தாக்கிய கொடூரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டு வாடகை கேட்டு தாக்கிய சம்பவம் வேதனையளித்துள்ளது.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


திருப்பூர் ரமசிவம்பாளையம், ராசன்காடு பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில்  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிஜய் பார்ஜோ வயது35, இவரது மனைவி சிவானி பார்ஜோ வயது 33 என்ற தம்பதி குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் திருப்பூரிலுள்ள பனியன் கம்பனியில் வேலை செய்து வருகிறார்கள்.


இந்த சமயத்தில் பாலசுப்பிரமணியம், அவரது மனைவி புஷ்பா, மருமகன் செந்தில் ஆகிய மூவரும் சிவானி மற்றும் அவரது கணவரிடம் வீட்டு வாடகையை கேட்டுள்ளனர். அதற்கு அந்த தம்பதி தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நிலவி வருகிறது. வேலை ஆரம்பித்த பிறகு வேலைக்கு சென்று தருவதாக கூறியுள்ளனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் பாலசுப்பிரமணியம், புஷ்பா, செந்தில் ஆகிய மூவரும் தம்பதியரை கண்மூடி தனமாக தாக்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த சிவானி பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர்கள் மூவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போல் இக்கட்டான சூழ்நிலையிலும் வாடகை கேட்டு தாக்கிய சம்பவம் வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு