சீனிவாசபுரம் பகுதியில் 100 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள்

அவிநாசி அருகில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் 100 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் அவிநாசி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் வழங்கப்பட்டது.


வணக்கம் திருப்பூர் - Vanakkam Tiruppur


கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வெளியில் செல்லமுடியாமல் வருமானம் இல்லாமல் ஏழை மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு  தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் எம் .ஏ. அவர்களின் ஆலோசனைப் படியும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எம் .எஸ் .எம். ஆனந்தன் அவர்களின் ஆலோசனைப் படியும் அவிநாசி நகர கழக செயலாளர் P.ராமசாமி மற்றும் அவிநாசி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் அவிநாசி நகரம் 15 வது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் 100 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் நகர கழக துணைச் செயலாளர் .எம். எஸ் .மூர்த்தி. அவிநாசி நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், பூபதிராஜ், குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த உதவியை அப்பகுதி மக்கள் மகிச்சியுடம் பாராட்டி வருகிறார்கள். 


Popular posts
நல்லூர் பகுதி கழக செயலாளர் மற்றும் அனைத்து வட்டக்கிளை செயலாளர்கள் சந்திப்பு... பொள்ளாச்சி வ.ஜெயராமன் நேரில் சென்று ஆலோசனை
Image
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
Image
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு